தொழிலாளியிடம் செல்போனை பறிக்க முயன்ற 3 வாலிபர்கள் கைது


தொழிலாளியிடம் செல்போனை பறிக்க முயன்ற 3 வாலிபர்கள் கைது
x

தொழிலாளியிடம் செல்போனை பறிக்க முயன்ற 3 வாலிபர்கள் கைது

ஈரோடு

பெருந்துறை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெள்ளிவாடி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 65). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து பணிக்கம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் சின்னச்சாமியிடம் செல்போன் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கொடுக்க மறுத்து உள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சேர்ந்து சின்னச்சாமியிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்று உள்ளனர். உடனே அவர், 'திருடன் திருடன்' என சத்தம் போட்டு உள்ளார். உடனே 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனிடையே அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று தப்பி ஓட முயன்ற 3 பேரையும் பிடித்து பெருந்துறை போலீசிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த சம்பத்குமார் மகன் சிவகுமார் (21), குழந்தைவேல் மகன் யோகேஷ் (22), ஈரோடு சங்கு நகரை சேர்ந்த ஜான் பாட்சா மகன் முகமது ரியாஸ் (22) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story