ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வை வேலூர் மாவட்டத்தில் 3,120 பேர் எழுதுகிறார்கள்


ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வை வேலூர் மாவட்டத்தில் 3,120 பேர் எழுதுகிறார்கள்
x

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வை வேலூர் மாவட்டத்தில் 3,120 பேர் எழுதுகிறார்கள்

வேலூர்

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்வை வேலூர் மாவட்டத்தில் 3,120 பேர் எழுதுகிறார்கள்.

இதற்காக வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொணவட்டம் அரசுப்பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஊரீசு பள்ளி, அலமேலுமங்காபுரம் சினேகதீபம் பள்ளி உள்பட 11 மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

காலை மற்றும் மாலை வேளையில் நடைபெறும் இந்த தேர்வில் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story