விருதுநகரில் 32 பவுன் நகைகள் திருட்டு


விருதுநகரில் 32 பவுன் நகைகள் திருட்டு
x

விருதுநகரில் 32 பவுன் நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்


விருதுநகரில் 32 பவுன் நகைகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் ஊழியர்

விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 23). இவர் அரசு வேலைக்காக சென்னையில் தங்கி படித்து வருகிறார். இந்தநிலையில் இவரது பெற்றோர் குணசேகரன் மற்றும் பூமாதேவி ஆகிய இருவரும் உடல்நிலை சரியில்லாத நிலையில் வீட்டில் இருந்து வருகின்றனர். இவரது சகோதரர்கள் பிரவீன் மற்றும் பிரசாத் ஆகியோரும் சென்னையில் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

அர்ஜுனின் பெற்றோரின் உதவிக்காக மதுரையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் விருதுநகர் குல்லூர்சந்தை இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவரை ரூ.15 ஆயிரம் மாத ஊதியத்தில் பணி அமர்த்தினர்.

32 பவுன் நகை திருட்டு

இந்தநிலையில் வீட்டு பீரோவின் சாவி பீரோவின் மேல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 23-ந் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 32 பவுன் நகைகளை காணவில்லை. கிருஷ்ணவேணியும் தொடர்ந்து வேலைக்கு வரவில்லை.

எனவே பீரோவிலிருந்த நகைகளை கிருஷ்ணவேணி எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அர்ஜுன் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story