குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 366 மனுக்கள் பெறப்பட்டன


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 366 மனுக்கள் பெறப்பட்டன
x

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 366 மனுக்கள் பெறப்பட்டன.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 366 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், விபத்து மரணத்திற்கான நிதியுதவி தொகை தலா ரூ.1 லட்சம் வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மற்றும் இயற்கை மரணம் நிதியுதவி தொகை தலா ரூ.17 ஆயிரம் வீதம் 8 பயனாளிகளுக்கு ரூ.1,36,000 என ஆக மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.3,36,000-க்கான காசோலைகளை கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார். மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மிஷன் வத்சால்யா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதி ஆதரவு உதவித்தொகைக்கான ஆணையினை, பயனாளிக்கு அவர் வழங்கினார். இக்கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், துணை கலெக்டர் (பயிற்சி) ஜெயஸ்ரீ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story