11-ம் வகுப்பு மாணவரை தாக்கிய 4 பேர் கைது


11-ம் வகுப்பு மாணவரை தாக்கிய 4 பேர் கைது
x

நெல்லையில் 11-ம் வகுப்பு மாணவரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் ஒருவர் நெல்லை டவுன் பகுதியில் டியூசன் படித்து வருகிறார். இவரை டவுன் பகுதியை சேர்ந்த 4 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவரின் தந்தை நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டவுன் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மற்றும் 3 பள்ளி மாணவர்கள் சோ்ந்து தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story