சூதாடிய 4 பேர் கைது


சூதாடிய 4 பேர் கைது
x

சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் அருகே மணகெதி ஊராட்சியில் குணசேகரன் (வயது 21), தமிழரசன் (20), மணி (23), குணசீலன் (25) ஆகிய 4 பேரும் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இது குறித்து போலீசார், 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story