பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
x

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

பழைய குற்றாலம் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மதுரையை சேர்ந்த கருப்பையா (வயது 48), மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (49), கார்த்திகேயன் (38), மற்றொரு கருப்பையா (62) ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, ரூ.6,500-ஐ பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story