கஞ்சா விற்ற 4 பேர் கைது


கஞ்சா விற்ற 4 பேர் கைது
x

தஞ்சையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்

தஞ்சாவூர்

தஞ்சை சிவாஜிநகர் ஒற்றைப்பாலம் அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதைப் பார்த்தவுடன் அங்கே நின்ற 4 பேர் தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை சேவப்ப நாயக்கன்வாரி நடுக்குளத்தை சேர்ந்த வருண் விஜய் (வயது 19), செக்கடி முருகன் காலனியை சேர்ந்த வீரா (18), சேவப்ப நாயக்கன்வாரி மேல் கரையை சேர்ந்த முகமது ரபீக் (22), மானோஜியப்பா வீதியை சேர்ந்த சுரேஷ் பாண்டியன் (45) என்பதும், இவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.








Next Story