சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது


சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது
x

சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர், பிப்.14-

சுசீந்திரம் அருகே கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலையில் குலசேகரன்புதூர் பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனையிட்ட போது அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் குலசேகரன்புதூரை சேர்ந்த மணிகண்டன் (வயது31), வெங்கடேஷ் (19), வினோத் (26), நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ரோட்டை சேர்ந்த ஜாபேஸ் (24) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் ைகது செய்து அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story