4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் -தமிழக அரசு உத்தரவு


4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் -தமிழக அரசு உத்தரவு
x

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில் கூறி இருப்பதாவது:-

தொழிற்சாலைகள் ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக இயக்குனர் அர்ச்சனா பட்நாயக், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கங்கள் இயக்குனர் எல்.நிர்மல்ராஜ், தொழிற்சாலைகள் ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் பூஜா குல்கர்ணி, புவியியல் மற்றும் சுரங்கங்கள் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) ஆணையர் ஹர்சகாய் மீனா, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக மாற்றப்பட்டு இருக்கிறார்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story