கடலூர் அரசு பேருந்து கல்வீச்சு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது


கடலூர் அரசு பேருந்து கல்வீச்சு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது
x

கல்வீச்சு சம்பவத்தில் இதுவரை 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

கடலூர் ,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்தனர்.

இந்த போராட்டத்தின்போது கடலூர் அரசு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த கல்வீச்சு சம்பவத்தில் தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு சம்பவத்தில் இதுவரை 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.


Next Story