பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 ஏரிகள் நிரம்பின


பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 ஏரிகள் நிரம்பின
x

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 ஏரிகள் நிரம்பின.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பச்சைமலை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் மீண்டும் நிரம்பி வருகின்றன. இதில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், லாடபுரம் பெரிய ஏரி, அரும்பாவூர் பெரிய ஏரி, வடக்கலூர் ஏரி ஆகியவை ஏற்கனவே நிரம்பின. தற்போது நூத்தப்பூர், வடக்கலூர் அக்ரகாரம், வெண்பாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளும், வெங்கலம் சிறிய ஏரியும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.


Next Story