மதுவிற்ற 4 பேர் கைது


மதுவிற்ற 4 பேர் கைது
x
நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வேலூர் நான்கு ரோடு, சந்தை பகுதி, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் வேலூர் கிழக்கு தெரு தேர் வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 39), வேலூர் கந்த நகரை சேர்ந்த டிரைவர் மோகன் (65), பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி (48) மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்த பாரத் (29) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர் மற்றும் ஒரு மொபெட் உள்ளிட்ட மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story