மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 4 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 4 பேர் படுகாயம்
x

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் இருந்து சூளகிரி நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்றது. பின்டகானபள்ளி என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது கார்மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த 2 பேர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடதத்ி வருகிறார்கள்.


Next Story