அங்கீகாரம் இன்றி செயல்படும் 400 மழலையர் பள்ளிகள்

கோவையில் அங்கீகாரம் இன்றி செயல்படும் 400 மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கோவையில் அங்கீகாரம் இன்றி செயல்படும் 400 மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கோவை மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அங்கீகாரமற்ற பள்ளிகள்
எந்த தனியார் பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. தவறினால் அபராதம் விதித்து மூடப்படும். அங்கீகாரம் பெற்றும் அதை புதுப்பிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். பிரைமரி எனப்படும் (பிரிகேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி.) பிளே ஸ்கூல் அங்கீகாரம் பெற்று, நர்சரி மற்றும் பிரைமரி வகுப்புகள் நடத்தினாலும் பள்ளி மூடப்படும்.
ஓடு, சிமெண்ட் ஷீட், கூரை கட்டிடங்களில் பள்ளிகளை நடத்த கூடாது. இதுபோன்ற பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை பெற் றோர் சேர்க்கக்கூடாது.
மாடி கட்டிடங்கள் அல்லது குடியிருப்பு கட்டிடங்களில் பள்ளி நடத்தக்கூடாது. அங்கீகாரம் பெற்றதாக விளம்பரம் செய்து அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் கட்டணம்
பதிவு எண் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை பெற்றோர் சேர்க்கக்கூடாது. விளையாட்டு பள்ளிகள் கூடுதல் கட்டணம் வாங்கி அரசு உத்தரவை மீறி மாலை 6 மணி வரை செயல்படுகிறது.
இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கே.ஜி. வகுப்புகள் கட்டிடங்களில் மேல் மாடியில் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தீயணைப்பு, சுகாதாரம் மற்றும் தாசில்தார் சான்றிதழ் வழங்கும் போது தனி கான்கிரீட் கட்டிடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். குடியிருப்பு, வணிக வளாகம், மாடி கட்டிடங் கள் போன்ற பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
கடும் நடவடிக்கை
அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர் தங்களது குழந்தை களை சேர்த்துவிட்டு, ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கல்வித்துறை பொறுப்பு ஏற்காது. பல இடங்களில் அடுக்குமாடி கட்டிடங்களில் கூடுதல் வாடகை பெற்று கட்டிட உரிமையாளர்கள் பள்ளி நடத்த அனுமதி வழங்கி வருகின்றனர்.
இது போன்ற கட்டிடங்களில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் கட்டிட உரிமையாளர் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அரசு அனுமதியின்றி சிறு குழந்தைகள் காப்பகம் மற்றும் விளை யாட்டு பள்ளிகள் நடத்த கட்டிடத்தை வாடகைக்கு விடும் கட்டிட உரிமையாளர் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டியல் வெளியீடு
ஒண்டிப்புதூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் தகுதி யான பள்ளிகளின் விவரம் பலகையில் ஒட்டப்படும். கோவை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அங்கீ காரம் இல்லாமல் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
இது போன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மூடப்படும். மேலும் அங்கீகாரம் பெற்ற விளையாட்டு பள்ளிக ளின் விவரம் அடுத்த மாதம் (பிப்ரவரி) வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.






