43 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 கடைகளுக்கு 'சீல்'


43 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 கடைகளுக்கு சீல்
x

43 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் நேற்று மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைகள் மற்றும் குடோனில் சுமார் 43 கிலோ புகையிலை பொருட்கள் இருந்து கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த 2 கடைகள் மற்றும் குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் 2 கடை உரிமையாளர்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்களும் ஒப்படைக்கப்பட்டன.


Next Story