ரூ.45 லட்சத்தில் சாலை-வாறுகால் அமைக்கும் பணி தொடக்கம்

கோவில்பட்டியில் ரூ.45 லட்சத்தில் சாலை-வாறுகால் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதி 2023- 24 ஆண்டுக்கு ரூ.45 லட்சம் ஒதுக்கீட்டில் 17 இடங்களில் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. வீரவாஞ்சி நகர் 9-வது தெருவில் சாலை அமைக்கும் பணியை நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரசபை பொறியாளர் சண்முகநாதன் உள்பட நகரசபை கவுன்சிலர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





