48 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்


48 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்
x
தினத்தந்தி 12 March 2023 6:45 PM GMT (Updated: 12 March 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 48 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வழங்கினார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான முதல்-அமைச்சர் பதக்கம், இந்த ஆண்டு 60 பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 26-ந் தேதி விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில், 12 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து மீதமுள்ள 48 போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் நேற்று வழங்கப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கலந்துகொண்டு, போலீசாருக்கு பதக்கம் வழங்கி பாராட்டினார்.


Next Story