தொழிலாளியை தாக்கிய 5 பேர் கைது

நெல்லை அருகே தொழிலாளியை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 33). தொழிலாளி. இவர் வெங்கடாசலபுரம் குத்தாலபேரி பகுதியில் வந்தபோது அதே பகுதியை சேர்ந்த முண்டசாமி (23), பூல் பாண்டி (30), முருகப்பெருமாள் என்ற முருகன் (48), உலகன் (45), உலகநாதன் (25) ஆகியோர் சேர்ந்து நாராயணனை கல்லால் தாக்கினர். அதனை தடுக்க வந்த அவரின் பெரியப்பாவான சுப்பையா என்பவரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





