சூதாடிய 5 பேர் கைது


சூதாடிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:46 PM GMT)

சாத்தான்குளம் பகுதியில் சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிரண்டார்குளம் பகுதியில் உள்ள குளம் அருகே, வடக்கு விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் லட்சுமணன் (வயது 35), ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த மருதையா (55), வடக்கு பன்னம்பாறை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாடசாமி (30), மேல பண்டாரபுரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (41), சாத்தான்குளம் கூவைகிணறு பகுதியைச் சேர்ந்த அழகுராஜன் (49) ஆகிய 5 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகள், ரூ.20 ஆயிரத்து 820 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story