சிறுவனை வாளால் தாக்கிய 5 பேர் ைகது


சிறுவனை வாளால் தாக்கிய 5 பேர் ைகது
x

அருப்புக்கோட்டையில் சிறுவனை வாளால் தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் சிறுவனை வாளால் தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுவன் மீது தாக்குதல்

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், அஜிஸ்நகரை சேர்ந்த ஜெட்சன் (20) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பணம் கொடுப்பதை பற்றி பேச வேண்டும் அஜிஸ்நகர் நகராட்சி பூங்கா அருகே வா என அந்த சிறுவனிடம் ஜெட்சன் கூறி உள்ளார். இதை நம்பி சிறுவனும் தனது நண்பருடன் அஜிஸ்நகர் பூங்கா அருகே வந்தார்.

அப்போது ஜெட்சன் உள்பட 5 பேர் சேர்ந்து சிறுவனையும், அவனுடன் வந்த நண்பரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறிது நேரத்தில் பெரிய வாளை வைத்து சிறுவனையும், அவரது நண்பரையும் அந்த 5 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ஜெட்சன் உள்பட 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

5 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து 17 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து ஜெட்சன், அன்பு நகரை சேர்ந்த ஜோயல் (19), வேல்முருகன் காலனியை சேர்ந்த சண்முகவேல் (22), சி.எஸ்.ஐ. காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் மோகன்ராஜ் (20), ராமலிங்க நகர் ஆர்ச் பகுதியை சேர்ந்த அபிஷேக் (19) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்த வாளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Related Tags :
Next Story