5 பேருக்கு டெங்கு காய்ச்சல்


5 பேருக்கு டெங்கு காய்ச்சல்
x

5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் நலமுடன் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு டெங்கு வார்டு, ரத்த வங்கி, ரத்தப்பரிசோதனை கூடம் மற்றும் காய்ச்சல் வார்டுகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், காய்ச்சலுக்கு உண்டான ஊசி, மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா? என்றும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு, கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story