படிக்க உதவி கேட்ட பள்ளி மாணவியை மாறி மாறி கற்பழித்த கவுன்சிலர், 2 பெண் உட்பட 5 பேர் கைது


படிக்க உதவி கேட்ட பள்ளி மாணவியை மாறி மாறி கற்பழித்த கவுன்சிலர், 2 பெண் உட்பட 5  பேர் கைது
x

தனியார் விடுதிக்கு மாணவியை அழைத்துச் சென்ற சிகாமணி, அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரை சேர்ந்தவர் சிகாமணி. 43 வயதான இவர், அதிமுகவில் பரமக்குடி நகர்மன்ற 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரின் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் கயல்விழி என்ற பெண். இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அவரது பெற்றோர் பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாமல் ஏழ்மையில் இருப்பதை அறிந்த கயல்விழி அவர்களை அணுகி இருக்கிறார்.

தன்னுடைய முதலாளியிடம் சொல்லி சிறுமிக்கு உதவுவதாக கூறவே அவர்களும் அதை நம்பி இருக்கின்றனர். பின்னர் மாணவியை கவுன்சிலர் சிகாமணியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார் கயல்விழி. அப்போது மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் உள்ள தனியார் விடுதிக்கு மாணவியை அழைத்துச் சென்ற சிகாமணி, அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

பின்னர் கயல்வழி அறிமுகத்தின் பேரில் பிரபாகரன் என்பவரும் மாணவியிடம் அத்துமீறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து பரமக்குடி மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த ராஜா முகமது பார்த்திபனூரில் ஜவுளிக்கடை வைத்துள்ளதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது என 3 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே பணம் தொடர்பான பிரச்சினை குறித்து வெளிவந்த போது கயல்விழி மற்றொரு நபரிடம் போனில் பேசிய ஆதாரம் வெளியான நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் சென்றுள்ளது. எஸ்.பி. உத்தரவின் பேரில் பரமக்குடி குற்றப்பிரிவு போலீசார் அதிமுக கவுன்சிலர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது, கயல்விழி, அன்னலட்சுமி என்கிற உமா என 5 பேரை கைது செய்தனர்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட மாணவி பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டம், கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் சிறையில் அடைத்தனர். இதில் கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகிய இருவரும் இதுபோல் பலரிடமும் பேசி அவர்களை பாலியல் தொழிலில் தள்ளும் தரகர்களாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் இளம் பெண்களிடம் பண ஆசையை தூண்டி, அவர்களை இதுபோல் பலரிடம் அனுப்பி வந்ததும் தெரியவந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் கைது எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது. வண்ணாரப்பேட்டை சிறுமி வழக்கு போல இந்த சம்பவம் பரமக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதன் அடுத்த கட்ட கைது யாராக இருக்கும்? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தின் வடு மறைவதற்குள் ராமநாதபுரத்தில் அரங்கேறி இருக்கிறது இந்த சம்பவம்.


Next Story