ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மர்ம நபர் திருடிச்சென்றார்.
திருச்சி கே.கே.நகர் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் கமலா(வயது 76). சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட்டில் இருந்து கே.கே.நகருக்கு அரசு பஸ்சில் வந்தார். கே.கே.நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய பின்னர் பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கே.கே.நகர் போலீசில் கமலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





