தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
x

ெபண்ணுக்கு பாலியல் ெதால்லை அளித்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 29), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19.10.2018 அன்று இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து கருப்பசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 8 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Related Tags :
Next Story