500 சிறுவர்-சிறுமிகள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை


500 சிறுவர்-சிறுமிகள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை
x

வெம்பக்கோட்டையில் 500 சிறுவர், சிறுமிகள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையில் 500 சிறுவர், சிறுமிகள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

சிலம்பம் சுற்றி சாதனை

வெம்பக்கோட்டையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரு யுவகேந்திரா சார்பில் 500-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள், இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் முன்னிலை வகித்தார்.

சிலம்பம் சுற்றும் சாதனையை சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நம்ம ஊரு சூப்பரு நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரசார ஊர்வலத்தை வெம்பக்கோட்டை யூனியன் ஆணையாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்.

உறுதிமொழி

ஊர்வலத்தில் மூலிகை தோட்டம் உருவாக்குதல், பள்ளி அங்கன்வாடி மையம் சுற்றியுள்ள பகுதியில் மரக்கன்று நடுதல், பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

வீட்டில் சேரும் கழிவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டும், ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணி பையை பயன்படுத்த வேண்டும். சுத்தமான பசுமையான கிராமத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஊர்வலத்தின் முடிவில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


Next Story