தமிழகத்தில் 522 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் 522 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று புதிதாக 301 ஆண்கள், 221 பெண்கள் என மொத்தம் 522 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 301 ஆண்கள், 221 பெண்கள் என மொத்தம் 522 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 104 பேர், செங்கல்பட்டில் 50 பேர், கோவையில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், திருவாரூர் மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.மேலும், 12 வயதுக்குட்பட்ட 52 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 64 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் 409 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 496 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 375 பேரும், செங்கல்பட்டில் 420 பேரும், கோவையில் 338 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story