தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 59 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 59 வழக்குகளுக்கு தீர்வு
x

கரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 59 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

கரூர்

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவானது நேற்று மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு என தனித்துவமான தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.

இதில் கரூரில் 2 அமர்வுகளும், குளித்தலையில் ஒரு அமர்வும் என மொத்தம் 3 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றன.

59 வழக்குகள் தீர்வு

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இந்த அமர்வுகளில் 373 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இதில், 59 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 79 லட்சத்து 91 ஆயிரத்து 230 தொகை வழங்கப்பட்டது.

இதில் நீதிபதிகள், பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன் நிர்வாகிகள், வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.


Next Story