கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 பேரும், வார்டு உறுப்பினர்களுக்கு 7 பேரும் போட்டி


கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 பேரும், வார்டு உறுப்பினர்களுக்கு 7 பேரும் போட்டி
x

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 6 பேரும், வார்டு உறுப்பினர்களுக்கு 7 பேரும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவி, 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் கடந்த 20-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 2 பெண்கள் உள்பட 6 பேரும், வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒரு பெண் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேப்பந்தட்டை ஒன்றிய வி.களத்தூர் கிராம ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மொத்தம் 3 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆலத்தூர் ஒன்றிய பிலிமிசை 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 2 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஒருவர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். கீழப்புலியூர் கிராம ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும், இரூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால், அந்த பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். வருகிற 9-ந்தேதி வாக்குப்பதிவும், 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.


Next Story