பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
x

மோகனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் செல்லும் சாலையில் உள்ள முள்ளுக்காட்டில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் தலைமையில் போலீசார் அந்தப் பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்போது அரசு கல்லூரியின் பின்புறம் உள்ள முள்ளுக்காட்டில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த, நாமக்கல்லை சேர்ந்த ராஜா (வயது 40), கோவிந்தன் (36), மோகனூர் தங்கராஜ் என்பவர் மகன் முரளி (42), கரூர் மாவட்டம் மணவாடி பெருமாபட்டியை சேர்ந்த சிவா (41), அணியாரத்தை சேர்ந்த குப்புசாமி (48), நாமக்கல் வெலிங்டன் தெரு கண்ணன் (55) ஆகியோர் என்பது தொியவந்தது. அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,300 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story