புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர் மற்றும் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், பிரேம்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை முதல் மாலை வரை மணல்மேடு பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சோதனை மேற்கொண்டனர்.

6 பேர் கைது

இந்த சோதனையின்போது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக மணல்மேடு பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் (வயது 60), கிருஷ்ணமூர்த்தி மனைவி ஞானவல்லி (66) மற்றும் பாஸ்கரன் (47), கருப்பையா (51), முகமது சாதிக் (58), முனுசாமி (55) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 5 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணல்மேடு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story