மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு


மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு

கோயம்புத்தூர்

பீளமேடு

கோவை விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகரை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி ஜீவரத்தினம் (வயது 60). இவர் நேற்றுமுன்தினம் காலை தனது பேத்தியை அருகே உள்ள தனியார் பள்ளியில் கொண்டு சென்று விட்டார். பின்னர் அவர் தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவர் சேரன்மாநகர் அம்பாள் நகர் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஆசாமி ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story