நள்ளிரவில் வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு


நள்ளிரவில் வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு
x

ஜோலார்பேட்டை அருகே மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து 6 பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை அருகே பாச்சல் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட ஹயாத் நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 60). சம்பவத்தன்று நள்ளிரவில் குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.

மறுநாள் காலை வசந்தா எழுந்து பார்த்த போது கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து பார்ததபோது, பொருட்கள் சிதறி கிடந்தன அத்துடன் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story