போலீஸ் எழுத்து தேர்வை 6 ஆயிரத்து 834 பேர் எழுதுகின்றனர்


போலீஸ் எழுத்து தேர்வை 6 ஆயிரத்து 834 பேர் எழுதுகின்றனர்
x

போலீஸ் எழுத்து தேர்வை இன்று 6 ஆயிரத்து 834 பேர் எழுதுகின்றனர்.

பெரம்பலூர்

தமிழகத்தில் 2-ம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் 2 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு 6 ஆயிரத்து 834 பேர் தேர்வை எழுதுகின்றனர். தேர்வில் தமிழ் மொழி தகுதி தேர்வும், முதன்மை எழுத்து தேர்வும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.40 மணி வரை நடக்கிறது.இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கு நுழைவுச்சீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, நுழைவுச்சீட்டு தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாது. பிற பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு, தேர்வு முடிந்த பிறகு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும், என்று தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் போலீஸ் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் செய்துள்ளனர்.


Next Story