6 முறை கருக்கலைப்பு, பெண் ஊழியர் எரித்து கொலை தொழிலதிபர், மனைவி மீது வழக்கு


6 முறை கருக்கலைப்பு,  பெண் ஊழியர் எரித்து கொலை தொழிலதிபர், மனைவி மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Jun 2022 12:09 PM GMT (Updated: 2 Jun 2022 12:17 PM GMT)

கோவையில் பெண் ஊழியரை எரித்து கொலை செய்ததாக தொழிலதிபர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவைகோவையில் பெண் ஊழியரை எரித்து கொலை செய்ததாக தொழிலதிபர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாது:-

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் கடையில் வேலைக்கு சேர்ந்தார். அந்த கடையை கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தொழிலதிபர் நவநீதன் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்த நவநீதன் மற்றும் அவரது மனைவியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு உள்ளார். இதில் அவர்கள் இருவரும் பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அந்த பெண், கோவை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கணவரை பிரிந்த வாழ்ந்த எனக்கும், நவநீதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பலமுறை என்னை பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். இதனை அறிந்த நவநீதன், கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். இதையடுத்து நான் அந்த கர்ப்பத்தை கலைத்தேன். இதேபோல் 6 முறை கர்ப்பத்தை கலைத்து உள்ளேன். இது அவரது மனைவிக்கும் தெரியும்.

அடிக்கடி கர்ப்பம் கலைந்ததால் எனது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே எனது மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டிற்கு வந்தேன். அப்போது அவர்கள் எனக்கு பணம் தர மறுத்ததுடன், குளியல் அறைக்கு அழைத்து சென்று என் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் அந்த பெண் இது நவநீதன் வீட்டில் வைத்து பேசிய தனது மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து பேசிய வீடியோக்கள், கடிதம் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்தில் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் இறந்ததை தொடர்ந்தும், கைப்பற்றப்பட்ட வீடியோக்களை வைத்தும் போலீசார் இதனை கொலை வழக்காக மாற்றினர். இதையடுத்து தொழிலதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இதனிடையே தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்யக்கோரி, இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story