வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!


வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!
x

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2ஆவது நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்ப்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் யூனிட்டில் 2-வது அலகில் ஏற்பட்ட கொதிக்கலன் குழாய் கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.


Next Story