ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 650 மாடுகள்விற்பனைக்கு வந்தன


ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 650 மாடுகள்விற்பனைக்கு வந்தன
x

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 650 மாடுகள் விற்பனைக்கு வந்தன.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 650 மாடுகள் விற்பனைக்கு வந்தன.

650 மாடுகள்

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 70-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இவை ஒன்று ரூ.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைபோனது.

நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை செய்வதற்காக வாகனங்களில் ஏற்றி வந்தனர். 300 எருமை மாடுகள், 350 பசு மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

80 சதவீதம் விற்பனை

இதில் பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும் விலைபோனது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், விவசாயிகளிடம் நேடியாக விலை பேசி மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

நேற்று கொண்டு வரப்பட்ட மாடுகளில் 80 சதவீத மாடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story