அதிக குழந்தைகளை ஏற்றி வந்த 7 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்

அதிக குழந்தைகளை ஏற்றி வந்த 7 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருவெறும்பூர் பெல் கணேசபுரம் பகுதியில் திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, பெல் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஆட்டோவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக குழந்தைகளை ஏற்றி வந்தனர். விதிகளை மீறி ஓட்டிய 7 ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் அவர் அபராதம் விதித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





