இரு தரப்பினர் மோதல் 7 பேர் படுகாயம்


இரு தரப்பினர் மோதல் 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:46 PM GMT)

விக்கிரவாண்டி அருகே இரு தரப்பினர் மோதல் 7 பேர் படுகாயம் 13 பேர் மீது வழக்கு

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே உள்ள செய்யாத்து விண்ணான்பாளையம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதன் வரவு-செலவு கணக்குகள் ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் பார்க்கப்பட்டது. அப்போது சேகர்(45) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அன்பழகன்(42) என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அன்று இரவு 9 மணிக்கு அன்பழகன் தனது உறவினர்களுடன் சேகர் வீட்டுக்கு சென்று தாக்கினர். பதிலுக்கு சேகர் தரப்பினரும் திருப்பி தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த இருதரப்பை சேர்ந்த 7 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இருதரப்பை சேர்ந்த 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story