தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 63). தொழிலாளி. இவர் கடந்த 17.4.2020-ந் தேதியன்று 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுச்சாமியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், தொழிலாளி பொன்னுச்சாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.


1 More update

Related Tags :
Next Story