தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய 70 கிலோ கஞ்சா பறிமுதல்


தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய 70 கிலோ கஞ்சா பறிமுதல்
x

தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த 70 கிலோ கஞ்சாவை கைப்பற்றி கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடந்த 70 கிலோ கஞ்சாவை கைப்பற்றி கடலோர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

70 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் சாக்கு மூடைகள் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமேசுவரம் கடலோர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் கடலோரப் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

கம்பிப்பாடு உள்ளிட்ட 2 இடங்களில் கரை ஒதுங்கி கிடந்த இரண்டு சாக்கு பைகளை பிரித்துப் பார்த்தனர். அதில் 2 கிலோ பார்சல் என சுமார் 30 பார்சலுக்கும் மேலாக மொத்தம் 70 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்து ராமேசுவரம் கடலோர போலீஸ் நிலையம் கொண்டு வந்து கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தல்காரர்களா?

தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கடந்த இந்த கஞ்சா பார்சல்களை கடத்தல்காரர்கள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தி செல்லும்போது இந்திய கடலோர காவல் படையின் கப்பலை கண்டதும் கஞ்சா பார்சல்களை கடலில் வீசிவிட்டு கடத்தல்காரர்கள் படகுமூலம் தப்பி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story