ரூ.70 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்


ரூ.70 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்
x
தினத்தந்தி 28 Aug 2023 8:00 PM GMT (Updated: 28 Aug 2023 8:00 PM GMT)

ரெட்டியார்சத்திரம் பகுதியில் ரூ.70 லட்சத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்.

திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் ரூ.70 லட்சத்தில் நீலமலைக்கோட்டை, கரிய கவுண்டன்பட்டி பகுதிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடங்களையும், பழக்கனூத்து ஊராட்சி புது எட்டமநாயக்கன்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடையும், புதுச்சத்திரம் ஊராட்சி அழகுபட்டியில் புதிய ரேஷன் கடையையும், அண்ணா நகரில் புதிய மேல்நிலை தொட்டியையும் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. பொருளாளர் சத்தியமூர்த்தி, ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவகுருசாமி, மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் இ.பெரியசாமி கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.

விழாவில் நீலமலைக்கோட்டை ஊராட்சி தலைவர் ராதா தேவி சுவாமிநாதன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் விவேகானந்தன், மாவட்ட பிரதிநிதி எல்லை ராமகிருஷ்ணன், கொத்தபுள்ளி ஊராட்சி தலைவர் ரங்கசாமி, தி.மு.க. பொறுப்பாளர்கள் குமரேசன், அம்பை ரவி, ஒன்றிய செயலாளர் மணி, பழக்கனூத்து ஊராட்சி தலைவர் செல்வராணி ராமசாமி, புதுச்சேரி ஊராட்சி தலைவர் லட்சுமி, ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலரவன், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story