போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம்


போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம்
x

சாலை விபத்தில் உயிரிழந்த, திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் சுந்தரபாண்டியன். இவர், கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்கு சென்ற போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர் சம்பளம் பெறுவதற்காக எச்.டி.எப்.சி. வங்கியில் கணக்கு வைத்திருந்தார்.

இதனால் அவருடைய குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் இழப்பீடு வழங்க வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து சுந்தரபாண்டியனின் மனைவி சங்கீதாவிடம், வங்கி சார்பில் ரூ.70 லட்சத்துக்கான காசோலையை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கினார். இதில் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story