75-வது சுதந்திர தின விழா: சென்னையில் 2-வது நாள் ஒத்திகை நிகழ்ச்சி


75-வது சுதந்திர தின விழா: சென்னையில் 2-வது நாள் ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 Aug 2022 3:28 AM GMT (Updated: 11 Aug 2022 3:30 AM GMT)

75-வது சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்கின்றனர்.

சென்னை,

75-வது சுதந்திர தின விழாவை வருகிற 15-ந்தேதி, சென்னை கோட்டையில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு 6, 11, 13-ந்தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 6-ந் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை முதல் தலைமை செயலகம் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2-வது நாள் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. காலை தொடங்கிய காவல் துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சியானது தற்போது ராஜாஜி சாலையில் நடைபெற்று வருகிறது.


Next Story