ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.77½ லட்சம் வருமானம்

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.77½ லட்சம் வருமானம் கிடைத்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.77 லட்சத்து 38 ஆயிரத்து 183 ரொக்கமும், 2,166 கிராம் தங்கமும், 1870.900 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 261-ம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





