78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை


78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
x

திருப்பத்தூரில் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

திருப்பத்தூர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறைத்தீர்வு கூட்டரங்கில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 78 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். இதையடுத்து முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) முருகேசன், சிறப்பு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story