தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை திருட்டு


தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
x

தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை திருட்டு

நீலகிரி

ஊட்டி


நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த தாய்சோலை பகுதியை சேர்ந்தவர் லிங்கன் (வயது 61). இவரது மனைவி கமலா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். லிங்கன்- கமலா தம்பதியினர் அந்த பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைந்து இருந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பூஜை அறையில் வைத்து இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.92 ஆயிரம் திருடு போய் இருந்தது. இது குறித்த தகவலின் பேரில் மஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story