800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

ஆலங்குளம் அருகே 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி

ஆலங்குளம்:

நெல்லை குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு மயிலப்பபுரம் சக்திவேல் வீடு பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபால் துரைச்சாமி மற்றும் சக்திவேல் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story