ஆஸ்பத்திரியில் 862 பேர்: தமிழகத்தில் 2,316 பேருக்கு கொரோனா


ஆஸ்பத்திரியில் 862 பேர்: தமிழகத்தில் 2,316 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று 1,331 ஆண்கள், 985 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 316 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 1,331 ஆண்கள், 985 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 316 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 596 பேர், செங்கல்பட்டில் 354 பேர், கோவையில் 164 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

மேலும், 12 வயதுக்கு உட்பட்ட 89 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 407 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரியில் 862 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 52 வயதான நபர் உயிரிழந்து உள்ளார். மற்ற மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 17 ஆயிரத்து 85 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 5 ஆயிரத்து 823 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 563 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story