செல்போன் வாங்கி கொடுக்க மறுத்ததால் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை


செல்போன் வாங்கி கொடுக்க மறுத்ததால் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
x

மானூர் அருகே செல்போன் வாங்கி கொடுக்க மறுத்ததால் 8-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே உள்ள வடக்கு வாகைக்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் துரையப்பா (வயது 13). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 3 வாரங்களாக பெற்றோரிடம் தனக்கு ஒரு செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வாங்கி கொடுக்க மறுத்ததால் வெறுப்படைந்த துரையப்பா சம்பவத்தன்று வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.

இதை அறிந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து துரையப்பாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு துரையப்பாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, துரையப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story